×

மாநிலத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன் திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி

திருச்சி, மார்ச் 29: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் 35வது வார்டுக்கு உ ட்பட்ட கே.கே.நகர், சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை ரோடு, திலகர் தெரு, ஏர்போர்ட் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் இனிகோ இருதயராஜ் பேசியதாவது: நான் வெற்றி பெற்றவுடன் திருச்சி கிழக்கு தொகுதியை மாநிலத்தின் முதன்மை தொகுதியாக மாற்றி காண்பிப்பேன். இந்த தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து நவீனப்படுத்துவேன். எனவே என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். வேட்பாளர் வாக்கு சேகரிப்பின்போது பகுதி செயலாளர் பாலமுருகன், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Tags : Trichy East DMK ,Inigo Iruthayaraj ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு...